மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு பாரம்பரிய நாட்டுப்புற பாடல் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்து, ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமைத் தேடித்தந்த ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவன் E.காளிதாசன், XII F (வரலாற்று பிரிவு) , விளக்கூர், கரக்கத்திக்கோட்டை ( po),
காளிதாசனை நேற்று 19/11/2021 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய திருமதி கவிதா ராமு அவர்கள் தமது இல்லத்திற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மாணவன் காளிதாசன் பாடிய பாடலை மீண்டும் பாடச் சொல்லி கேட்டு மிகவும் ரசித்து பாராட்டினார். இந்நிகழ்வில் மரியாதைக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களும், ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலகத்தில் மரியாதைக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவன் காளிதாசனை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.