மணமேல்குடி ஒன்றியத்தில் 2020-21-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து இன்று(செவ்வாய்க்கிழமை) சாலை மறியலில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்தனர்.
ஆனால் அங்கு தாசில்தார் மற்றும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் விவசாயிகள் அதிகாரிகள் வரும்வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.