தமிழகம் முழுவதும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா விவரங்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டம் பொத்தூர் கிராமத்தில், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு இ.குமார் என்பவர் மனு கொடுத்தார். அந்த மனுவை பரிசீலித்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனி வட்டாட்சியர், எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, குமார், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கை தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த தகவல் ஆணையர் சு.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது? என்ற விவரங்களை அடங்கிய பட்டியலை மனுதாரருக்கு 7 நாட்களுக்குள் பொன்னேரி தனி வட்டாட்சியர் வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினர்களில் யார் யாருக்கெல்லாம் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், 2 மாதங்களுக்கு அதுதொடர்பான அறிக்கை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வருகிற ஜனவரி 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.