புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் கணேஷ்நகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருட்டு போகும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் இல்லை, பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் கணேஷ்நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக சிக்கிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் கீரனூரை சேர்ந்த தேவராஜ் (வயது 39) என்பது தெரியவந்தது. மேலும் அவர் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனை வளாகம், கணேஷ்நகர், கீரனூர், டவுன், திருக்கோகர்ணம், வல்லாத்திராக்கோட்டை பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 14 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.