இருசக்கர வாகனம் மீது மோதுவதைத் தவிர்க்க சாலையில் ஓரமாக ஒதுங்கிய கார், கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி நுழைவாயில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆதிபட்டினத்தை நோக்கி இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
இதில் கார் ஓட்டுநர் சாகுல் ஹமீது, அவருடைய நண்பர் ரகுமான் கான் என 2 பேர் இருந்தனர். கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்த நிலையில் கோபாலப்பட்டிணத்திற்கு செல்வதற்காக சாலையின் மறுபுறம் திடீரென சென்றதையடுத்து அதன் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டுநர் சற்று ஓரமாக திருப்பியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கோபாலப்பட்டிணம் நுழைவாயில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ரகுமான் கான் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். அப்போது அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் மோதிய விபத்தில் கார் கண்ணாடி மற்றும் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.