திருப்பெருந்துறை ஊராட்சி அனைத்து வணிக பெருமக்களுக்கும் ஊராட்சி மன்றம் சார்பில் வருகிற 01.01.2022 சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் (நெகிழி) பயன் படுத்தக்கூடாது எனவும், தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்றவை விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்பெருந்துறை ஊராட்சியில் 01.01.2022 சனிக்கிழமை முதல் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எளிதில் மக்காத பிளாஸ்டிக் (நெகிழிகள்) சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. நமது திருப்பெருந்துறை ஊராட்சியின் அனைத்து வர்த்தகர்களும் சமூக நலன்கருதி பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாமென திருப்பெருந்துறை ஊராட்சி மன்றம் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
மீறிப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபாரத் தொகையுயம், தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்றவை விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
திருமதி. சந்திரா ராஜமாணிக்கம் ஊராட்சி மன்றத்தலைவர்
மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம்
திருப்பெருந்துறை ஊராட்சி மன்றம்
ஆவுடையார்கோவில் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.