தொண்டி அருகே உள்ளது எஸ்.பி.பட்டினம். இங்குள்ள மீன் மார்க்கெட் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று முன்தினம் இரவு 2.44 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் முகமூடி அணிந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கீழே குனிந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்க்கிறார். அப்போது அபாய ஒலி சத்தம் கேட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சிறிது நேரத்தில் வெளியே சென்றுள்ளார். இந்த காட்சியை மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் கண்காணித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து ராமநாதபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் எஸ்.பி.பட்டினம் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முகமூடி அணிந்திருந்த திருடனின் சி.சி.டி.வி காட்சி |
அப்போது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த ஏ.டி.எம். எந்திரம் லேசாக திறந்து இருப்பதும் கொள்ளை முயற்சி நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள எஸ்.பி.பட்டினம் போலீசார் அந்த மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஏ.டி.எம். இயந்திரத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த போலீசார் அனுமதிக்கவில்லை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.