புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 வார்டுகளுடன் தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாடு மீண்டு வருகிற நிலையில் தற்போது புதிய வகை வைரசான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
50 படுக்கைகள் தயார்
தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தும் பணி மற்றும் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தனி வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டானது கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.