தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு சார்பில் விழிப்புணர்வு போஸ்டர்கள் தயாரிக்கும் போட்டி எய்ட்ஸ் விழிப்புணர்வு, ரத்ததானம் மற்றும் காசநோய் தடுப்பு ஆகிய 3 தலைப்புகளில் நடைபெற்றது. இதில், ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவ- மாணவிகள் க.திவ்யதர்ஷினி, பெ.ஹேமலதா மற்றும் சி.நித்திஷ்குமார் முறையே ஒவ்வொரு பிரிவிலும் முதலிடமும், ரத்ததான போஸ்டர் தயாரிக்கும் போட்டியில் க.தமிழ்செல்வி இரண்டாமிடமும், சே.திரிஷா, மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர், சுகாதார பணிகளின் துணை இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். முதலிடம் பெற்ற 3 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3000, இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.2000 மும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.ஆயிரமும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச் செல்வன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.