பருவநிலையில் மாற்றம் காரணமாக அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் அறந்தாங்கி பகுதியில் நேற்று காலை வெடி வெடித்தது போல வானத்தில் பலத்த சத்தம் கேட்டது. அப்போது வானத்தில் புகை மண்டலமும் காணப்பட்டது. இந்த அதிசய நிகழ்வு நடந்து சில மணி நேரத்தில் அறந்தாங்கி அருகே அரசர்குளம் வடபகுதியில் உள்ள ஒரு குளத்தில் மரக்கா சைசில் ஒரு பாக்ஸ் விழுந்ததாக அப்பகுதியை சேர்ந்த நபர்கள் பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள குளத்தை வருவாய் துறையினர், போலீசார் சென்று பார்வையிட்னர். அப்போது ஏதும் தெரியவில்லை எந்த அசம்பாவிதம் இல்லை என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அப்பகுதில் மழை தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் குளத்தில் உள்ள தண்ணீரை எடுத்து விட்டு குளத்தில் விழுந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.