பெங்களூருவில் இருந்து அறந்தாங்கிக்கு பார்சலில் கடத்தப்பட்ட 46 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதவிர தனிப்படை போலீசாரும் சோதனை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் சிலரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு பார்சலில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பார்சல் லாரியை புதுக்கோட்டையில் போலீசார் மறித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் 46 கிலோ புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.36 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக அறந்தாங்கியை சேர்ந்த சேகர், பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments