மணமேல்குடி அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடி சென்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடி சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மளிகை கடையில் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜிப்பட்டினத்தை சேர்ந்தவர் நபிஸ்கான். இவர், கிருஷ்ணாஜிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இதையடுத்து அங்கு சென்ற மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.23 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர்.
காய்கறி கடை
இதேபோல் அப்பகுதியில் உள்ள இப்ராஹிம் ஷா என்பவரது மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.42 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதேபோல் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான காய்கறி கடையின் பூட்டை உடைத்து ரூ.6 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ேகமராவில் பதிவான திருடா்கள்
இந்த நிலையில் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் மர்மநபர்கள் சுற்றித்திரியும் தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் நிலைய தனிப்பிரிவு காவலர் ராம பாண்டி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து ஓடினர். உடனே காவலர் ராம பாண்டி, அவர்களை விரட்டி சென்று உள்ளார். இருப்பினும் அவரால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நபிஸ்கான் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் 3 மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
அதில் 2 பேரின் முகம் நன்றாக பதிவாகி உள்ளதால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.