மக்கள் நீதிமன்றத்தில் 1,724 வழக்குகள் சமரச தீர்வு




புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி, முதன்மை சார்பு நீதிபதி சசிக்குமார், கூடுதல் சார்பு நீதிபதி அசோக்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 மாஜிஸ்திரேட் அறிவு ஆகியோர் கொண்ட 3 அமர்வுகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள தாலுகா நீதிமன்றங்களில் 4 அமர்வுகள் என மொத்தம் 7 அமர்வுகளில் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 1,724 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டன. மேலும் ரூ.7 கோடியே 43 லட்சத்து 93 ஆயிரத்து 920 உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments