புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு 42 ஆடுகள் மீட்கப்பட்டன.
தனிப்படை போலீசார்
ஆடு திருடர்களை விரட்டி பிடித்த போது திருச்சி நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக ஆடு திருடர்களை பிடிக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருச்சி சரகத்தில் ஆடு திருடர்களை பிடிக்க டி.ஐ.ஜி. சரவண சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருடும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தனிப்படையினர் நடத்திய சோதனையில் ஆடு திருடும் கும்பலான மச்சுவாடியை சேர்ந்த ரஞ்சித் (வயது 25), போஸ்நகரை சேர்ந்த கோபி (22), அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தை சேர்ந்த அபுபக்கர் (20), காமராஜ புரத்தை சேர்ந்த புஷ்பராஜ் (20), காந்திநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 42 ஆடுகள் மீட்கப்பட்டன.
சரக்கு வேன் பறிமுதல்
ஆடுகளை திருட பயன்படுத்திய சரக்கு வேனும் கைப்பற்றப்பட்டன. மேற்கண்ட ஆடுகளை திருமயம், நமணசமுத்திரம், பனையப்பட்டி, பொன்னமராவதி ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டவை என தெரியவந்தது. இவர்கள் கும்பலாக சென்று ஆடுகளை திருடி வந்துள்ளனர். தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.