திருச்சி அருகே பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை



திருச்சி அருகே பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பட்டா வழங்க லஞ்சம்

திருச்சி சமயபுரம் அருகேயுள்ள புறத்தாக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி தனபாக்கியம். இவருக்கு கடந்த 1999-ம் ஆண்டு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் பெரியசாமி வீடு கட்டி உள்ளார். இந்தநிலையில் தனது இடத்துக்கு பட்டா கேட்டு சிறுகனூர் அருகே உள்ள கண்ணாகுடி கிராம நிர்வாக அதிகாரி மலர்க்கொடியிடம் (வயது 39), பெரியசாமி விண்ணப்பித்து இருந்தார். ஆனால், பட்டா வழங்க மலர்க்கொடி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பெரியசாமி இதுகுறித்
து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

கைது

புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்து மலர்க்கொடியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி நேற்று காலை மலர்க்கொடி வீட்டில் லஞ்ச பணத்தை பெரியசாமி கொடுத்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி லஞ்ச வழக்கில் கைதான சம்பவம் வருவாய்த்துறை அலுவலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments