திருச்சி அருகே பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பட்டா வழங்க லஞ்சம்
திருச்சி சமயபுரம் அருகேயுள்ள புறத்தாக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி தனபாக்கியம். இவருக்கு கடந்த 1999-ம் ஆண்டு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் பெரியசாமி வீடு கட்டி உள்ளார். இந்தநிலையில் தனது இடத்துக்கு பட்டா கேட்டு சிறுகனூர் அருகே உள்ள கண்ணாகுடி கிராம நிர்வாக அதிகாரி மலர்க்கொடியிடம் (வயது 39), பெரியசாமி விண்ணப்பித்து இருந்தார். ஆனால், பட்டா வழங்க மலர்க்கொடி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பெரியசாமி இதுகுறித்
து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
கைது
புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்து மலர்க்கொடியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி நேற்று காலை மலர்க்கொடி வீட்டில் லஞ்ச பணத்தை பெரியசாமி கொடுத்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி லஞ்ச வழக்கில் கைதான சம்பவம் வருவாய்த்துறை அலுவலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.