கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் மாங்குளம், நெடுங்குளம் ஆகிய நீர்நிலைகளை சிலர் ஆக்கிரமித்து நெல், தர்பூசணி, தென்னை மற்றும் தைல மரங்களை பயிரிட்டு உள்ளனர். தொடர் மழை பெய்தும் குளங்களில் போதிய அளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டனர். இதைதொடர்ந்து வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் முன்னிலையில் நில அளவையர்கள் 2 குளங்களின் எல்லைகளை அளவீடு செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளும்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குளத்தின் பரப்பு உரிய அளவீட்டின்படி விரிவுபடுத்தப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.