கால்நடை பராமரிப்பு துறையால் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.அதன்படி தேர்வு துணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட கால்நடை பண்ணை வளாகம், மச்சுவாடி, தொழிற்பேட்டை (அஞ்சல்) புதுக்கோட்டை - 622 004 என்ற முகவரியில் 2022 ஜனவரி 7-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை (8, 9, 13, 14, 15, 16, 18 மற்றும் 23 ஆகிய 8 நாட்கள் நீங்கலாக) தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும நேர்காணல் நடைபெறவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்படவுள்ளது எனவும், அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தாரர்களுக்கு அழைப்பாணை கிடைக்க பெறவில்லை என்றால் அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதன் நகலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நேர்முக அழைப்பாணை கடிதம் இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் கூறியுள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.