நம்மை காக்கும் 48 மணி நேரம் சிகிச்சை திட்டத்தில் மணமேல்குடி ஸ்ரீ விஜய் மருத்துவமனை தேர்வு!



நம்மை காக்கும் 48 மணி நேரம் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை திட்டம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நம்மை காக்கும் 48 மணி நேரம் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை திட்டத்தை தமிழக முதல்வர் மேல்மருவத்தூரில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை மக்களும் பயன்பெறும் வகையில் நம்மை காக்கும் 48 மணி நேரம் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை திட்டத்தின் கீழ் கிழக்கு சாலையில் உள்ள மணமேல்குடி ஸ்ரீ விஜய் மருத்துவமனையை தமிழக முதல்வர் தேர்வு செய்து அதற்கான ஆணையை நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜாவிடம் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நம்மை காக்கும் 48 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் விபரம்:

1. ஸ்ரீ விஜய் மருத்துவமனை மணமேல்குடி,
2. அரசு மருத்துவமனை அறந்தாங்கி,
3. தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை MCH,
4. டாக்டர் முத்துராஜா மல்டி ஸ்பெஷல்டி மருத்துவமனை,
5. முத்து மீனாட்சி மருத்துவமனை, புதுக்கோட்டை,
6. புதுகை ஸ்டார் மருத்துவமனை புதுக்கோட்டை,
7. அரசு மருத்துவமனை விராலிமலை.

இத்திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.

48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின்வரும் மூன்று வழிகாட்டுதல்களின்படி சிகிச்சைகள் வழங்கப்படும்.

1. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.

2. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம்.

3. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சையை பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.

இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து விவரங்களை மருத்துவமனை, அவசரகால ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments