கோபாலப்பட்டிணத்தில் நெடுங்குளத்தை சுற்றி தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் நெடுங்குளத்தை சுற்றி தன்னார்வ இளைஞர்கள் சார்பில் டிச.11 மற்றும் டிச.12 அன்று 20-க்கு மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகளை நடப்பட்டது.

இதில் ஊர் தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை விதைத்தனர்.

ஒரு சில ஊர்களில் உள்ள இளைஞர்கள் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் இந்த காலத்தில் ஊர் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட செயல்படும் ஊர் தன்னார்வ இளைஞர்களுக்கு GPM மீடியா சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது ஊரை பசுமையாக ஊராக மாற்ற ஊர் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையாக மரத்தை வளர்ப்போம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

மரம் வளர்ப்பு பற்றி நபி மொழி மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு!
மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி)




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments