இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் (பட்டணம் -அவுலியா நகர்) மைத்தாங்கரை பின்புறம் உள்ள மண் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பட்டணம் மற்றும் அவுலியா நகரை இரண்டு பாதைகள் இணைக்கக்கூடியதாக உள்ளது. இதில் ஒன்று தார்ச்சாலையும் இன்னொன்று மண் சாலை ஆகும். முதலாவது பாதை பெரிய பள்ளிவாசலில் இருந்து நெடுங்குளம் வழியாக செல்லும் தார்ச்சாலை, இந்த சாலையை இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்.இப்பகுதியில் ஆண்கள் குளிக்கும் பகுதி இருப்பதால் பெரும்பாலும் பெண்கள் இப்பாதையை பயன்படுத்துவதில்லை. மைத்தாங்கரைக்கு பின்புறமாக உள்ள இன்னொரு மண் சாலையை பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் இந்த பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மண் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி அந்த பாதையை பயன்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சரிசெய்து தர வேண்டும் என்பது அந்த வழியாக செல்லும் பெண்களின் கோரிக்கையாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.