அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிதலமடைந்து உள்ள கட்டிடத்தை புதுப்பித்து தர பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை!



அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிதலமடைந்து உள்ள கட்டிடத்தை புதுப்பித்து தர பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளி வளாகம் வகுப்பறை கட்டிடம் பேஸ்மெண்ட் சிதலமடைந்து உள்ளது. அதை உடனடியாக (கட்டிட உறுதித்தன்மையை) ஆய்வு செய்து சீரமைப்போ அல்லது இடித்து விட்டு புதிதாக கட்டித் தரவேண்டும் என்றும்,
எந்த நேரத்திலும் இடிந்து விழக் கூடிய சூழ்நிலையில் இருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடத்தையும், சத்துணவு சமையல் அறை கட்டிடத்தையும் இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments