ஆலங்குடியில் நடந்த கொலை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!



ஆலங்குடி அருகே கல்லுக்குண்டுகரையில் விஜய் என்கிற செல்வகணபதியை (வயது 24) அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிகண்டன் என்கிற பிளேடு மணி (28) உள்பட 18 பேர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தனர்.

இதுதொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். ரவுடியான இவர் தொடர்ந்து ரவுடியிசத்தில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் பரிந்துரை செய்தார். 

அதன்படி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலில் புதுக்கோட்டை சிறையில் உள்ள மணிகண்டனிடம் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும், அவர் நேற்று திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments