கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிப்பறை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்கு பயின்றுவரும் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.
கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்குள்ள கழிப்பறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி கான்கிரீட் மேற்கூரை, சிமென்ட் பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.கழிப்பறை கட்டடத்தின் சுவர்கள், மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சேதமடைந்த கழிப்பறை கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இன்னொரு நெல்லை சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.