ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு புதிய உத்தரவு - தமிழக அரசு அறிவிப்பு






ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை
பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்.

பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை வகுப்புகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. 

ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

 வகுப்பறைகளிலும், பள்ளிகளிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

 தனியார் பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும். இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். 

நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments