கோபாலப்பட்டிணத்தில் குண்டும் குழியுமான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரில் தத்தளிக்கும் மக்கள்! ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டு!!



கோபாலப்பட்டிணத்தில் குண்டும் குழியுமான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.இதுகுறித்து புகார் கூறியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் ஆலமரம் ஈத்கா மைதானத்தில் இருந்து அரண்மனை தோப்பிற்கு செல்லும் தார்ச்சாலை சுமார் 15 வருடத்திற்கு முன் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது இந்த சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இங்கு மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் பெருமளவு குளம் போல தேங்கி நிற்கின்றது. இந்த சாலையானது சுமார் 550மீ தொலைவிற்கு குண்டும் குழியுமாக உள்ளதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், ஊற்று பகுதிக்கு குடிதண்ணீர் எடுக்க செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து வருகின்றனர். குறிப்பாக மழை நேரத்தில் சொல்லவே வேண்டியதில்லை, இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததாலும், சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. ஒரு சில சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலையானது மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த வழியாக தோப்பில் குடி தண்ணீர் எடுத்து செல்லும் பெண்கள், வாகனத்தில் சென்று குடிதண்ணீர் எடுத்து வரக்கூடிய வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெளியூர் சென்று வரக்கூடிய மாணவர்கள், வேலைக்கு அலுவலகத்திற்கு செல்லக்கூடியவர்கள், பள்ளிக்கூட வேன்கள், மீமிசல் கடைத் தெருவிற்கு சென்று வரக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் இதை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுகள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், மழை பெய்தால் எங்கள் பகுதி நதி போல் காட்சியளிப்பதாகவும், இதனால் இப்பகுதியை நாங்கள் நீந்தி தான் செல்ல வேண்டி இருப்பதாகவும், பள்ளிக்கூடத்திற்கு செல்லக்கூடிய குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து எந்திரிச்சு செல்லக்கூடிய நிலை உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் கூறினோம் ஆனால் ஊராட்சியில் பணம் இல்லை என கூறிவிட்டார்கள். இந்த ஆண்டு புகார் கூறினோம் ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொந்தளிக்கின்றனர்.

மேலும் சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். குண்டும், குழியுமான சாலையை போர்க்கால அடிப்படையில் கிராவல் கொண்டு செப்பனிட வேண்டும் எனவும், மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தாமல் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலை மட்டுமல்லாது கோபாலப்பட்டிணத்தில் இது போன்று பல இடங்களில் குளம் போல் தேங்கி நிற்கும் சாலையை சீரமைக்க கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments