கோவிட் 19 தடுப்பு நடவடிக்கையாக பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் விசா தொடர்பான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பொன்று இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு பயணிப்போர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு பயணிப்போர் ஆகிய சர்வதேச பயணிகளுக்கான விமான சேவைகள் 2022 ஜனவரி இறுதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விமான சேவை ரத்து டிசம்பர் 15,2021 வரை இருந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்புக்காக அது 2022 ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் சூழ்நிலை கருதி, விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளிக்கும் சில சர்வதேச விமானங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் நீரஜ் குமார் அறிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.