தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 16 மே 2004 உருவாக்கப்பட்டது. பிறகு தமிழகம் முழுவதும் கிளை, நகர், பேரூர், மாவட்ட அளவில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு பொதுசேவை மற்றும் சமூக சேவைகளை செய்து வருகிறது.
கோபாலப்பட்டிணம் TNTJ கிளை உருவான வரலாறு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமத்தில் TNTJ கிளை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் மக்களுக்கு சேவைகள் செய்வது வருகிறது. 2015-ஆம் ஆண்டு ஆரிப் கடை அருகே மர்கஸ் தொடங்கப்பட்டு தொழுகை, பயான்கள் மற்றும் சேவைகள் செய்து வந்தது.
புதிய பள்ளிவாசல் திறப்பு
கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பமானது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக (25-12-2020) வெள்ளிக்கிழமை அன்று ஸபா தெரு 3-ம் வீதியில் புதிய மர்கஸ் திறக்கப்பட்டது.இந்நிகழ்வில் நண்பகல் 12.50 மணியளவில் ஜுமுஆ உரை சகோ.MS.சுலைமான், மேலாண்மைக் குழு தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பம் நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணம் ஊர் மக்கள் அருகாமையில் உள்ள ஊர் மக்கள், பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக 25-12-2020) வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்கம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு TNTJ மேலாண்மைக் குழு தலைவர் MS சுலைமான் அவர்கள் பதிலளித்தார்.
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.