கோட்டைப்பட்டினத்தில் ரூ.10 கோடியில் புதிய மீன்பிடி இறங்குதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, நவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி இறங்குதளத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
கோட்டைப்பட்டினம் பகுதியில் மீன்பிடி தொழிலை மேம்படுத்தவும், மீனவர்களின் வசதிக்காகவும் இறங்குதளத்தை தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 5) தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் புதிய மீன்பிடி இறங்குதளத்தை முறைப்படி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. அருணா அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர், மீனவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள், மீனவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த புதிய இறங்குதளம் மூலம் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன் வணிகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments