திருச்சி, புதுக்கோட்டையில் முதன் முதலாக தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
தலை தூக்கும் ஒமைக்ரான்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஒரு புறம் படிப்படியாக குறைந்து வந்தாலும், அடுத்தபடியாக ஒமைக்ரான் வைரஸ் தொற்று தலை தூக்க தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் நேற்றுவரை 118 பேர் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
ஒமைக்ரான் 2 பேருக்கு உறுதி
இந்த நிலையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. அந்த வார்டில் ஒமைக்ரான் அறிகுறி உள்ளவர்கள் 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது சளி மாதிரி எடுக்கப்பட்டு, சென்னை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர்களில் நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுபோல புதுக்கோட்டையிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெரிய பாதிப்பு இருக்காது
இது குறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா கூறுகையில், ‘‘திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் சளி மாதிரி ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அந்த நபர் யார்? என்ற விவரம் எங்களுக்கு சென்னையில் இருந்து இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒமைக்ரான் தொற்றால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. விரைவில் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கி விடலாம். அச்சம் கொள்ள தேவையில்லை’’ என்றார்.
கொரோனாவுக்கு 2 பேர் பலி
இந்த நிலையில் திருச்சியில் நேற்று கொரோனா தொற்று 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர் சிகிச்சையில் 123 பேர் உள்ளனர்.
அதே வேளையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் ஆஸ்பத்திரி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.