‘புள்ளி பாய்’ என்ற செயலியில் செல்வாக்கான 100 முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தீவிரமாக செயல்படும் முஸ்லிம் பெண் பிரபலங்களையும், முஸ்லிம் பெண் பத்திரிகைகளையும் அடையாளம் கண்டு, அவர்களின் புகைப்படங்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ‘சுள்ளி டீல்ஸ்’ என்ற செயலியில் இதுபோலவே சித்தரிக்கப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா பெண் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, இதுகுறித்து மும்பை போலீசில் புகார் செய்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும் புகாரை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, அந்த செயலியை நடத்தி வரும் ‘ஹிட்ஹப்’ என்ற இணையதள நிறுவனம், செயலியை யாரும் பார்க்க முடியாதபடி முடக்கி விட்டது. இத்தகவலை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளும், இந்திய கம்ப்யூட்டர் அவசரகால நடவடிக்கை குழுவும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோல், மும்ைப சைபர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டிருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.