தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 10-ந் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகள் நேற்று பள்ளிக்கு வரவில்லை. ஆன்லைன் முறையில் அவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை நேற்று தொடங்கினர். பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் முன்பு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைமுறையில் இருந்தன. இந்தநிலையில் தற்போது மீண்டும் ஆன்லைன் வகுப்பு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.