ஆவுடையார்கோவில் கீழவீதியில், திருவண்ணாமலை பகுதியிருந்து வந்த சிலர் ஜுவல்லரி, டெக்ஸ்டைல்ஸ், பர்னிச்சர், மெட்டல் மார்ட் என்கிற பெயரில் கடை நடத்தி அப்பகுதியில் உள்ளவர்களிடம் சீட்டு என்கிற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். சிறிது காலம் இந்த கடை இயங்கி வந்திருக்கிறது. பிறகு திடீரென கடையை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், சீட்டு செலுத்தியவர்களுக்கு எந்த பொருளும் கிடைக்கவில்லை. பணமும் திருப்பி தரப்படவில்லை. பணம் கட்டியவர்கள் பணம் வசூல் செய்தவர்களிடம் கேட்டபோது, நாங்கள் வசூல் செய்த பணத்தை அந்த கடைகாரர்களிடம் கொடுத்து விட்டோம். நாங்கள் ஊழியர்கள் மட்டுமே. எங்களால் எப்படி பணத்தை திருப்பி கொடுக்க முடியும என்று கூறியுள்ளனர்.
இதனால், சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் அந்த கடையின் முன் நேற்று ஒன்று கூடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார், இதுகுறித்து மனு எழுதி கொடுங்கள், விசாரணை செய்கிறாம் என்று கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்ட அவர்கள் மனு எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.