சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி வரை கால நீட்டிப்பு




      தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ்-1 வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகை கோரி மாணவ, மாணவிகளிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும். பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து 15-ந் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 31-ந் தேதிக்குள் சரிபார்த்தும் அனுப்ப கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments