உத்ரா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழாவில் புன்னகை அறக்கட்டளை உறவுகளுக்கு சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது வழங்கி கெளரவிப்பு..





உத்ரா அறக்கட்டளை சார்பில் புன்னகைஅறக்கட்டளை உறவுகளுக்கு விருது வழங்கி சிறப்பிப்பு.அமரடக்கி தலைமையிடமாக கொண்டு புதுக்கோட்டை,திருச்சி, தஞ்சை,ராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, கடலூர்,பாண்டிச்சேரி மதுரை ,நாகப்பட்டினம். உள்ளிட்ட பகுதிகளில் புன்னகை அறக்கட்டளை என்ற பெயரில் அதன் நிறுவனர்,தலைவர் ஆ.சே.கலைபிரபு தலைமையிலான சிறந்தசமூக சேவகர்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பான சேவைகள் செய்து வருகின்றனர்.



புன்னகை அறக்கட்டளை உறவுகளின் 25பேருக்கு சேவைகளைப் பாராட்டி  மதுரையில்நடைபெற்ற உத்ரா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழாவில்  உத்ரா அறக்கட்டளையின் நிறுவனர், இயக்குனருமான ஹரிஉத்ரா மற்றும்  உளவியல் மருத்துவர்
திருமதி புவனா சரவணன் வழங்கி சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், சிறந்த ஆசிரியர்கள்,மிக சிறந்த மாணவர்கள், தன்னார்வலர்கள், திரைத்துறையினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments