தொழில் அதிபர் கொள்ளை போன வீட்டின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 559 பவுன் நகைகள் அறந்தாங்கி கோர்ட்டில் ஒப்படைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 51), தொழில் அதிபர். கடந்த மாதம் 27-ந் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த 750 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.
கோர்ட்டில் ஒப்படைப்பு
கடந்த 29-ந் தேதி தொழில் அதிபருக்கு சொந்தமான வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது மர்ம ஆசாமிகள் 559 பவுன் நகைகளை கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு அந்த நகைகளை போலீசார் மீட்டனர். இந்த நிலையில் 559 பவுன் நகைகளை அறந்தாங்கி கோர்ட்டில் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ஒப்படைத்தனர்.
3 தனிப்படை அமைப்பு
மேலும் கொள்ளை போன 191 பவுன் நகைகளை மீட்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.