கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் வேரோடு வீழ்ந்த ஆலமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு வெற்றி கண்ட அவுலியா நகர் பொதுமக்கள்





வேரோடு வீழ்ந்த பழமையான ஆலமரத்தைக்  மீண்டும் நட்டு உயிர்ப்பிக்கும் முயற்சியில்  கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பொதுமக்கள் இறங்கியுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்து வந்தது. இந்த ஆலமரம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிழல் தரக்கூடியதாக இருந்தது. அது கடந்த 07/09/2021 செவ்வாய் 1.40 pm மணியளவில் அருகே உள்ள மின்கம்பியில் திடீர் என சரிந்து விழுந்தது. காலங்காலமாக தங்களுக்கு நிழல்கொடுத்து வந்ததோடு, பறவையினங்களுக்கு வாழ்விடத்தையும் வழங்கிய மரம் வேரோடு சாய்ந்து கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்களும், இளைஞர்களும் வேதனை அடைந்தார்கள். அதனை மீண்டும் துளிர்விடச்செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் திடீரென வேரோடு மண்ணில் சாய்ந்த 200 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை, அவுலியா நகர் இளைஞர்கள் மீண்டும் அதே இடத்தில் நட்டனர். அந்த மக்களின் முயற்சி வீண் போகவில்லை அந்த ஆலமரம் மீண்டும் இலை தழைகள் இட்டு  மீண்டும் துளிர்விட்டு வளர்ந்து வருகிறது.

இந்த மரத்தை எப்படியாவது மீண்டும் வளர்த்துவிட வேண்டும் என்பது அவுலியா நகர் மக்கள் எண்ணமாக உள்ளது ‌.







பொதுநல அமைப்புகள், சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்களுக்கு GPM மீடியா சார்பாக கோரிக்கை:

வளர்ந்த மரத்தை அகற்றுவது எளிது, ஆனால் அதை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும். அந்த வகையில்   வீழ்ந்த மூன்று மரங்களில் அவுலியா நகரில் வீழ்ந்த மரத்தை மட்டுமே அவுலியா நகர் இளைஞர்களின் முயற்சியால் அதே இடத்தில் நடப்பட்டது. 

வரக்கூடிய காலங்களில் நன்கு வளர்ந்த மரங்கள் சாய்ந்தால் அதே இடத்தில் ஊன்றி திரும்பவும் வளர்த்து எடுக்க ஊரில் இருக்க கூடிய சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகள் முன்வர வேண்டும்.

நமது ஊரை பசுமையான ஊராக மாற்ற ஊர் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையாக மரத்தை வளர்தத்தெடுப்போம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

மரம் வளர்ப்பு பற்றி  நபி மொழி மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு

மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).

நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து மரம் வளர்க்க அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஊர் அக்கறையுடன்....
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments