சவுதி அரேபியாவில் வாகன விபத்தில் பலியான புதுக்கோட்டை டிரைவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு





பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள எம்.உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 37). இவருக்கு இளஞ்சியம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனந்தன் கடந்த 2 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி சவுதி அரேபியாவில் வாகன விபத்தில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் போராடி வந்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து தமிழக அரசு முயற்சியால் சவுதி அரேபியாவில் வாகன விபத்தில் இறந்த ஆனந்தன் உடல் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று இரவு சொந்த ஊரான எம்.உசிலம்பட்டிக்கு கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கணவரின் உடல் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு இளஞ்சியம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் தனது குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments