புதுக்கோட்டை மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் மகசூலை கணக்கிட 2,800 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தலா 4 திடல்கள், புள்ளியியல் துறையினரால் வழங்கப்படும் எதேச்சை எண்கள் மூலம் வருவாய்த்துறை ஆவணங்களுடன் சர்வே எண்கள் கண்டறியப்பட்டு அறுவடை மேற்கொள்ளப்படும்.
தற்போது நெல் சம்பா அறுவடை தொடங்கியதால் சில கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள அலுவலர்கள் வரும்போது அந்த கிராமத்து விவசாயிகள் திட்டத்தை செயல்படுத்த இடையூறுகளை ஏற்படுத்துவதாக தகவல் வருகின்றன. பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் இடத்தில் சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் சாகுபடிதாரர், வேளாண்மைத்துறை, புள்ளியியல்துறை, வருவாய்த்துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவன அலுவலர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவர். இதைத்தவிர வேறு எந்த ஒரு அலுவலரோ, விவசாயிகளோ அல்லது இதர நபர்களோ இருந்தால் மேற்படி பயிர் அறுவடை பரிசோதனை நடத்த இயலாமல் போனால் கிராமத்திற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க இயலாது. பயிர் அறுவடை பரிசோதனைக்கு ஏதாவது இடையூறு செய்தால் தொடர்புடைய நபரின் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும். இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்களில் நடைபெற உள்ள பயிர் அறுவடை பரிசோதனைகளை சரியான முறையில் நடத்திட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.