புதுக்கோட்டையில் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்திய போது அதில் கலந்து கொண்டவர்கள் மீது 17 பி எனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அரசின் முதல்-அமைச்சர், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். இதனால் மற்ற மாவட்டங்களில் பதவி உயர்வுக்கு பாதிப்பான ஆசிரியர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதில் மொத்தம் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரியிடம் பல முறை எடுத்துக்கூறியும் நடவடிக்கை இல்லை. அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர். இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் உள்ளே ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜீவன்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின் போது மற்றொரு அறையில் கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் உள்ளே அமர்ந்திருந்தனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.