ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் லாஞ்சியடி மற்றும் சோழியக்குடி கடலோர கிராம மீனவர்கள். இந்தப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.
வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்குச் சென்று செவ் வாய், வியாழன், ஞாயிற் றுக்கிழமைகளில் கரை திரும்புவர். ஒருமுறை கடலுக்குச் செல்ல டீசல், வேலை யாட்கள், உணவு என சுமார் ரூபாய் 30 ஆயிரம் வரை செலவாகும்.
கரை திரும்பியபின் ஆழ்கடலில் பிடிக்கப்பட்ட இரால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருட்கள் கேரளா உட்பட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக கொரோனோ பெரும் தொற்று மற்றும் இயற்கை சீற்றம் காரணமாகவும் கடல் தொழிலுக்கு செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஒமிக்கிரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் பெரும் இழப்புகளை ஏற் படுத்தியுள்ளது.
பொதுவாக வாரத்தில் 3 நாள் மட்டுமே கடலுக்கு சென்று திரும்பிய இந்த விசைப்படகு மீனவர்கள் தற்போது 2 நாட்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து லாஞ்சியடி விசைப்படகு மீனவர் தென்னரசு கூறும்போது, பொதுவாக ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் வியாபாரம் நல்லமுறையில் நடைபெறும்.
உயிரை பணயம் வைத்து ஆழ்கடலில் பிடித்து வரும் கடல் உணவுப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும். அசைவப்பிரியர்களும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளில் இரால், நண்டு போன்ற கடல் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் எங்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதோடு அசைவப்பிரியர்களுக்கு ஆழ்கடலில் பிடிக்கும் இரால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.