அறந்தாங்கியில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி 3 பேர் படுகாயம்




அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதியை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது 30), மணிகண்டன் (26), விஜய் (30). இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் அரசர்குளம் கீழ்பாதி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, மாத்தூர் ராமசாமிபுரத்தை சேர்ந்த முத்து என்கிற பசுபதி (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். இதில் சதீஷ் என்பவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மணிகண்டன், விஜய் ஆகிய 2 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலும், முத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments