புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.69 கோடியில் கட்டப்பட்ட 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
கீரனூரிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.69 கோடி மதிப்பில் 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரின் முன்னிலையில் இந்தக் கட்டடங்களை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திறந்து வைத்துப் பேசினாா்.
அப்போது பேசிய அமைச்சா் மகேஷ், மாநிலம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் ஏறத்தாழ 3,030 எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு, படிப்படியாக அவை அகற்றப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் கேஆா்என். போஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.