ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள தனியார் விடுதியில் கொள்ளை கும்பல் 3 அறைகள் எடுத்து தங்கியுள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அந்த விடுதிக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சிவகங்கை மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்த பூமி(வயது 49), தேவகோட்டை மாத்தூர் இலுப்பக்குடியை சேர்ந்த பழனிசாமி(45), காரைக்குடி அழப்பாபுரம் சண்முகநாதன்(44), காரைக்குடி நென்மேனி மனோஜ்குமார்(22), தேவகோட்டை விஸ்வநாதன்(20), மாத்தூர் நிரேஜ்(20), இலுப்பகுடி தோட்டக்காது நிதிஷ்குமார் (21), அதே ஊரைச் சேர்ந்த சிவகணேசன்(19) மற்றும் ஒரு சிறுவன் உள்பட 9 பேர் தங்கியிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் அவர்கள் இருந்த அறை மற்றும் அவர்களது பைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் வீச்சரிவாள்கள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பூமி என்பவர் மீது கொலை மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர் உள்பட 4 பேர் மீது காரைக்குடி மற்றும் சாகோட்டை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 பேரும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்கள் ஆயுதங்களுடன் லாட்ஜில் தங்கியிருந்ததால் ஏதாவது சதித்திட்டத்தை அரங்கேற்றுவதற்காகத்தான் வந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். அவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் லாட்ஜில் பதுங்கி இருந்தார்கள்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கர ஆயுதங்களுடன் 9 பேர் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் தொண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது-.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.