தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் 219 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 9 மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதத்தில் தலைமைச் செயலகத்தில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டன. மற்ற மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர் மூலம் வழங்க அறிவுறுத்தப்பட்டன.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தேர்வான 3 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும், நூல் பரிசும், அரசாணையும் கலெக்டர் கவிதாராமு நேற்று வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.