புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் கிராமத்தில் 2 ஆரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்திற்கு சம்மந்தப்பட்டத் துறை அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்து கலைந்து சென்றனர்.
மேலும் கிராமசபைக் கூட்டம் ரத்தான நாளிலிருந்து ஒரு மாத கால அவகாசத்திற்குள் மீண்டும் கிராமசபைக் கூட்டம் நடத்திட வேண்டும் என்ற நோக்கில், அப்பகுதி மக்கள் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்க்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லையென கூறப்படுகிறது.
எனவே தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட, அப்பகுதி மக்களே சிறப்பு மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்தில் எதிர் வருகிற 26-ந் தேதி நடைபெற இருக்கும் கிராமசபை கூட்டத்திற்காவது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வர வேண்டும். அவ்வாறு வரவில்லையெனில் மீண்டும் கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்பது, தற்போது நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மெத்தனப்போக்கில் செயல்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஊரில் உள்ள பல சாக்கடைகளை தூர்வாரி சுகாதாரத்தை மேம்படுத்தி தரவேண்டும். ரேஷன் கடைகளில் அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்ற அறிவிப்பால் வெளியூரில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களால் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பொதுநல இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் சாகுல்ஹமீது தலைமையில், பொதுமக்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.