நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இன்று(24/1/2022) திங்கள்கிழமை மாபெரும் இரத்ததான முகாம் கோபாலப்பட்டினத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 23 யூனிட் இரத்தம், அறந்தாங்கி மருத்துவமனை இரத்தவங்கிக்கு வழங்கப்பட்டது.
இந்த இரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் தலைமை வகித்தார் இதில் கிளை தலைவர் செய்யது இபுராஹிம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த இரத்ததான முகாமில் கிளை செயலாளர் முகமது அபுதாஹிர் கிளை பொருளாளர் மகாதீர் முகமது துணை தலைவர் முஹம்மது முனாஸ் துணை செயலாளர் முகமது ஹுசைன் மருத்துவணி ஹிதாயத்துல்லா மாணவரணி ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்...
அதிகமான பொதுமக்கள் இரத்ததானம் முகாமில் கலந்து கொண்டனர்...
என்றும் சமுதாயப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.