அதிராம்பட்டிணம் நகராட்சி வார்டு மறுவரையறை செய்யக் போராட்டம்






அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிரை நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி வார்டு மறுவரையறை நடந்திருப்பதாகவும் விடுமுறை நாளன்று, நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதாகவும் கூறி கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நகராட்சி அலுவககத்தை முற்றுகையிட்டு SDPI கட்சி போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட பகுதிகளில் அநீதமான முறையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை கண்டித்து நேற்று ஜனவரி 19 காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் நகராட்சி முன் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஈ.சி.ஆர். சாலை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments