இனப்பெருக்க காலத்தையொட்டி அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நீர் காகங்கள் குவிந்து வருகின்றன.
அலையாத்திக்காடு
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை ஓரத்தில் அலையாத்திக் காடு உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியான இங்கு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. பெரும்பாலும் இனப்பெருக்கத்துக்காகவே அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.
இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் முட்டையிட்டு, குஞ்சுகளை பொரித்து, மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு சிறகடித்து பறக்கின்றன. பறவைகளின் இனப்பெருக்க காலம் டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும்.
இனப்பெருக்க காலம்
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்க வேண்டிய பறவைகளின் இனப்பெருக்க காலம் ஒரு மாதம் தாமதமாக, தற்போது தொடங்கி உள்ளது. இதையொட்டி அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டை சுற்றி உள்ள ஏரி, குளங்களில் நாட்டுப்பறவை இனங்களான நாரை, கொக்கு, நீர் காகம் போன்ற பறவைகள் குவிய தொடங்கி உள்ளதை காண முடிகிறது.
புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரியில் எப்போதும் நீர் நிரம்பி இருக்கும். அங்கு கடந்த சில நாட்களாக நாரைகளும், நீர் காகங்களும் ஏராளமாக சுற்றித்திரிகின்றன.
இரை தேடும் பறவைகள்
ஏரியில் நீந்தும் மீன்கள் மற்றும் புழுக்களை பறவைகள் உணவாக உட்கொள்கின்றன. ஏரியை சுற்றி உள்ள நெல் வயல்களையும் பறவைகள் இரைக்காக சுற்றித்திரிகின்றன. மரைக்காகுளம் பகுதியில் மீன்கள் அதிகளவில் இருப்பதால் அங்கு பறவைகள் கூட்டம், கூட்டமாக முகாமிட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.