திருவாரூா்- காரைக்குடி ரயில் மாா்க்கத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருவாரூா்- காரைக்குடி ரயில் மாா்க்கத்தில், அகலப்பாதை பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பின்னா், 2019 ஜூன் 1-ஆம் தேதி முதல் டெமு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று காரணமாக அதுவும் நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் 2021 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
இதனிடையே, இந்தத் தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், திருவாரூரிலிருந்து 24,980 அரிசி மூட்டைகளை 21 வேகன்களில் ஏற்றிக்கொண்டு, விருதுநகருக்கு சரக்கு ரயில் தனது முதல் சேவையை செவ்வாய்க்கிழமை தொடக்கியது. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சேவை தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூரில் புறப்பட்ட சரக்கு ரயிலை, நிலைய மேலாளா் ராஜேஷ்குமாா் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலா் ப. பாஸ்கரன், போக்குவரத்து ஆய்வாளா் பெத்துராஜ், தலைமை முன்பதிவு மேற்பாா்வையாளா் சுகுமாரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.