கோட்டைப்பட்டிணம் கடைவீதியில் அதி நவீன சிசிடிவி கேமிரா பொருத்த வர்த்தகர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஏ.மனோகரன் (டிஎஸ்பி ) அறிவுறுத்தினார்.
கோட்டைப்பட்டிணம் காவல் நிலையத்தில் வர்த்தகர்களுக்கான கூட்டம் டிஎஸ்பி திரு.ஏ.மனோகரன் தலைமையில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் திரு. எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலை நடைபெற்ற கூட்டத்தில் டிஎஸ்பி மனோகரன் பேசியதாவது:
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், முக்கிய சாலை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். இதற்கு வர்த்தக சங்கமும், வர்த்தகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் எம்.அப்துல் ஹமீது, கவுரவ தலைவர் கான் மாமா, செயலாளர் MKA. ஜமால், பொருளாளர் KM.கலீல் ரஹ்மான், துணை தலைவர் PMS. சலீம், துணை செயலாளர் ARNS. முகம்மது இலியாஸ் சமூக ஆர்வலர்கள் முகம்மது லாபிர் மற்றும் வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அழைப்பின் பேரில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் நிறுவனங்கள் நூன் டெக் (NOON TECH CCTV) சார்பில் ஏ.எம்.ஹாரிஸ், ஜியா எலக்ட்ரானிக்ஸ் சார்பில் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு கருவிகள் அவசியம் பற்றி விளக்கினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.